dimanche 16 octobre 2011

சுகமான பொழுதுகளில்
உனதான நினைவுகள்
பால்வற்றிப் போன
பட்டை மரங்களாய்
என்னுள்ளே.......


நீ பேசிய மொழிகள்
சுருதி அறுத்த
வீனைகளாய்
அர்த்தமற்று போன
சங்கீதங்கள்.......

நமதான நட்புக்கு
நீ அர்த்தமானகூறிய போது
கவிதை ஏடுகளும்
வெற்றுத் தாள்களாகின.

நீ வடித்த
கண்ணிர்த்துளிகள்
விஷ அமிர்த்தளாய்
என் தேகம் சுடுபட்டு
புண்ணாய்துடிக்கின்றது.

இவை ஒவ்வொன்றும்
நீ இன்னோரு
இதயத்திற்கு
சொந்தமானபோதுதான்.

mardi 20 septembre 2011

நான் கடல்தாண்டி வந்திருந்தாலும்
சிறையில்தான் சிக்கிகொண்டிருக்கிறேன் .
அவள் இல்லாத - இந்த
பிரான்ஸ் வாழ்க்கை எனக்கு
சிறை வாழ்க்கைதான் ....

அஜக் சுஜீ.....